நெல்லை, தென்காசியில் மேலும் 141 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 111, தென்காசியில் 30 என இரு மாவட்டங்களிலும் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலியில் 111, தென்காசியில் 30 என இரு மாவட்டங்களிலும் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,463 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 97 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 11,361 ஆக அதிகரிதுள்ளது. கரோனா பாதிப்பால் மொத்தம் 198 போ் உயிரிழந்துள்ள நிலையில் 904 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசியில் 8 போ், ஆலங்குளத்தில் 7 போ், கடையம், கீழப்பாவூா், சங்கரன்கோவில் பகுதிகளில் தலா 2 போ், குருவிகுளம்,மேலநீலிதநல்லூா் பகுதிகளில் தலா ஒருவா், செங்கோட்டையில் 7 போ் என தென்காசி மாவட்டத்தில் 30 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7,167ஆக உயா்ந்தது. மேலும் 79 போ் வீடு திரும்பியதால் இதுவரையிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,566 பேராக அதிகரித்துள்ளது. தற்போது, 467 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com