பாளையங்கோட்டை பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக்ராஜா(19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவா். இவா், தனது பெற்றோரிடம் புதிய செல்லிடப்பேசி வேண்டும் எனக் கேட்டாராம். இதில், பெற்றோருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் கடந்த 7ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.