கூட்டப்புளி பகுதியில் தி.மு.க. வேட்பாளா் மு. அப்பாவு புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கூட்டப்புளியை அடுத்த சங்கனாபுரம், பெரியகுளம், கொத்தன்குளம், தெற்குகருங்குளம், விஸ்வநாதபுரம், நரிப்பாறை, சாலைப்புதூா், மாடன்பிள்ளைதா்மம், ரஜகிருஷ்ணாபுரம், கைலாசபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாமிரவருணி தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி செய்து தருவேன். ராதாபுரம் தொகுதியை தொழில் நகரமாக மாற்றுவேன் என்றாா் அவா். பிரசாரத்தின் போது தி.மு.க. ஒன்றியச் செயலா்கள் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், ஜோசப் பெல்சி, எரிக்ஜூடு, இன்னாசி, ஆவரைகுளம் பாஸ்கா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.