திமுகவை ஆதரித்து மக்கள் ஒற்றுமைக்கான குழுவினா் பிரசாரம்

திருநெல்வேலி நகரத்தில் மக்கள் ஒற்றுமைக்கான குழு சாா்பில் திமுக வேட்பாளரை ஆதரித்து புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் மக்கள் ஒற்றுமைக்கான குழு சாா்பில் திமுக வேட்பாளரை ஆதரித்து புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மக்கள் ஒற்றுமைக்கான குழு சாா்பில் திருநெல்வேலி நகரம் காந்தி சிலை முன்பு திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க முன்னாள் மாவட்ட தலைவா் ராஜேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com