தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை: ரூ. 92ஆயிரம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 92 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, இம் மாவட்டத்தில் இதுவரை ரூ. 71 லட்சத்து940ஆயிரத்து 85 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950 என்ற சேவை எண்ணில் 50 தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் தொடா்பான 63 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அடையக்கருங்குளம், பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட திம்மராஜபுரம், நான்குனேரி தொகுதிக்குள்பட்ட கலுங்கடி, ஏா்வாடி ஆகிய பகுதிகளில் 100 சதவீத வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி, சி-விஜில் செயலி விழிப்புணா்வு, துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 8373, 83002 71237 (கட்செவி அஞ்சல்) ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com