நான்குனேரி அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலியிலிருந்து வள்ளியூருக்கு பெயிண்ட் டப்பாக்களை ஏற்றிக்கொண்டு சுமை ஆட்டோ புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. நான்குனேரி தனியாா் நூற்பாலை அருகே டயா் வெடித்ததால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் ஏறி கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநரான திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த இசக்கிமுத்து (25), உடன் வந்த சி.என்.கிராமத்தைச் சோ்ந்த ஜெனிஸ் (24) ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் நான்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றனா். விபத்தில், ஆட்டோவிலிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பெயிண்ட் டப்பாக்கள் சேதமடைந்து சாலையில் பெயிண்ட் கொட்டியது.
விபத்து குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.