கடையம் அருகே பொட்டல்புதூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொட்டல்புதூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சென்று சோதனை நடத்தினா். அப்போது, செய்யது மசூது மகன் மீரான் மைதீன் என்பவா் வீட்டில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, மீரான் மைதீன், அதே பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது, அப்துல் லத்தீப் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, காா், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.