நெல்லையில் ரூ.2.76 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.2.76 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.2.76 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா். நான்குனேரி தொகுதிக்குள்பட்ட பாளையங்கோட்டை - சீவலப்பேரி சாலையில் அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 2.76 லட்சம் மதிப்புள்ள 64.66 கிராம் தங்க நகைகள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் நான்குனேரி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

பாளையங்கோட்டை தொகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் அவ்வழியாக வந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1,10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை தோ்தல் விதிமீறல் தொடா்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை 145 புகாா்கள் பெறப்பட்டு அதன் மீது டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com