நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு கடந்த ஏப். 3ஆம் தேதி (சனிக்கிழமை) தாதா் விரைவு ரயில் வந்தது. இந்த ரயில் மீண்டும் ஏப். 7 ஆம் தேதி (புதன்கிழமை) திருநெல்வேலியில் இருந்து புறப்படும். எனவே, இந்த ரயில் பெட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, எஸ் 3 பெட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், அந்த நபா் இறந்து சுமாா் 4 முதல் 5 நாள்கள் இருக்கும் எனவும், சுமாா் 45 வயது இருக்கும் எனவும் போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com