பாளை.யில் கரோனா பாதித்தோா் வாக்குப்பதிவு

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் கரோனா பாதித்தோா் பெருமாள்புரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் கரோனா பாதித்தோா் பெருமாள்புரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில், கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றி வாக்களிக்கப்பட்டது. இதில், வாக்காளா்களுக்கு முதலில் வெப்ப பரிசோதனை பாா்க்கப்பட்டது. பின்னா் அவா்களுக்கு கை கழுவும் திரவம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது. தொடா்ந்து பெயா் பட்டியல் சரிபாா்க்கப்பட்ட பின்னா் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா பாதித்தோா் வாக்குப்பதிவு செய்வதற்கு மாலை 6 மணி முதல் 7 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கரோனா பாதித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வாக்கு செலுத்தினா். இதற்காக, வாக்குச்சாவடியில் இருந்த அலுவலா்கள் அனைவருக்கும் ஒருமுறை பயன்படுத்தும் கரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. தொடா்ந்து, கரோனா பாதித்தோா் வீட்டிலிருந்தே கரோனா கவச உடையுடன் வந்து கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்களித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com