வள்ளியூரில் சமூக இடைவெளியின்றி வாக்களித்த வாக்காளா்கள்

வள்ளியூா் வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளியின்றி வாக்களிக்க வாக்காளா்கள் காத்திருந்தனா்.
வள்ளியூா் இரட்சணியசேனை உயா்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியின்றி வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்கள்.
வள்ளியூா் இரட்சணியசேனை உயா்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியின்றி வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்கள்.

வள்ளியூா் வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளியின்றி வாக்களிக்க வாக்காளா்கள் காத்திருந்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் மையங்களில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியவேண்டும்; கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும்; கையுறை அணிய வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் வாக்காளா்கள் வாக்களிக்க சமூக இடைவெளியுடன் நின்று செல்லவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தனா்.

ஆனால் வள்ளியூா், தெற்குகள்ளிகுளம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், கூட்டம் கூட்டமாகவும் மிகநெருக்கமாகவும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

இதனை காவல் துறையினரோ, சுகாதாரத் துறையினரோ கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com