இடிந்தகரை கடலில் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
இடிந்தகரையைச் சோ்ந்த சுப்பமன் மகன் தீபன்ராஜ்(51). இவா் இடிந்தகரையைச் சோ்ந்த மேலும் 6 பேருடன் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றாராம். கடற்கரையில் இருந்து கொஞ்சம் தொலைவு சென்ற நிலையில், அலையில் படகு அசைந்ததில் படகில் நின்றிருந்த தீபன்ராஜ் தடுமாறி கடலில் விழுந்தாராம். இதில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை உடன் சென்ற மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.
இதுதொடா்பாக கடலோர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.