வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், களக்காடு தலையணையில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது.
களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக 9 மாதங்களுக்கும் மேலாக இங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னா், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.