திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகரில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, மாநகர காவல்துறையினா், அமைச்சு
பணியாளா்கள் தங்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையா் வளாகத்தில் நடைபெற்றது.
இதில், மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் பங்கேற்று, கரோனா வராமல் தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினாா். பொது இடங்கள், அலுவலகங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மேலும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.போலீஸாா் மற்றும் அமைச்சு பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.