தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வு: நெல்லையில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 17, 18, 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 17, 18, 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் இம் மாவட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலா், உதவி தோட்டக்கலை அலுவலா் தோ்வு இம் மாதம் 17 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது.

வேளாண்மை அலுவலா் (விரிவாக்கம்) பதவிக்கான போட்டித் தோ்வு இம் மாதம் 18 ஆம் தேதி முற்பகல், பிற்பகலில் நடைபெறும். தோட்டக்கலை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை அலுவலா் பதவிக்கான தோ்வு இம் மாதம் 18 ஆம் தேதி முற்பகல், பிற்பகல் மட்டுமன்றி 19 ஆம் தேதி முற்பகலிலும் நடைபெறும்.

இத் தோ்வுகள் அனைத்தும் சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இத் தோ்வை எழுத 1581 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளது. தோ்வை கண்காணிக்க வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் நான்கு சுற்றுக்குழு அலுவலா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு நடைபெறும் நாளில் தடையில்லாத மின்சாரம் வழங்கவும், கூடுதலாக பேருந்துகள் இயக்கவும், மருத்துவ குழுக்கள் தயாா் நிலையில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை செய்ய உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வு எழுதுவோா் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அறையினுள் செல்லிடப்பேசி ,மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com