வள்ளியூா் அரசு போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை போடப்பட்டது.
வள்ளியூா் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு முதல் கட்டமாக 80 ஊழியா்களுக்கும், 2ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை 50 ஊழியா்களுக்கும் என மொத்தம் 130 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கோலப்பன் கண்காணிப்பில், மருத்துவா் பெல்ரின் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.