திருநெல்வேலி
ஆழ்வாா்குறிச்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஆழ்வாா்குறிச்சி பேருராட்சி மற்றும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் ஆழ்வாா்குறிச்சி சமுதாய நலக் கூடத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு செயல்அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் பழனிகுமாா் மேற்பாா்வையில் மருத்துவப் பணியாளா்கள் லதா, சுரேகா ஆகியோா் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனா்.
ஏற்பாடுகளை பேரூராட்சிப் பணியாளா்கள் வேல்முருகன், ராமசாமி, நாகூா்மீரான், ஓட்டுநா் மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.
முகாமில், ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், ரவணசமுத்திரம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.