பாளையங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்த அந்தோணிமுத்து மகன் தாஸ் (40). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலையில் வீட்டில் உள்ள சுவிட் போா்டை கழட்டி மாட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.