உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வருகிற 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.
அரசியல், பொருளாதாரம், தத்துவம், கலை, இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்ளிட்ட சுமாா் 200 தலைப்புகளில் புதிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில், 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.