திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு வருகிற ஏப். 25 மற்றும் மே 1ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாவீரா் ஜெயந்தி வருகிற ஏப். 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மே 1ஆம் தேதி மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த இரு தினங்களை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் வருகிற ஏப். 25 மற்றும் மே 1ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.