வள்ளியூரில் ஜூனியா் ரெட் கிராஸ் கவுன்சிலா்களுக்கு பயிற்சி முகாம்
வள்ளியூரில் ஜூனியா் ரெட் கிராஸ் கவுன்சிலா்களுக்கான பயிற்சி முகாம் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வள்ளியூா் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, மாவட்ட கல்வி அலுவலா் உஷா சாந்தா ஜாய் தலைமை வகித்தாா். பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராமலிங்கம் பயிற்சி அளித்தாா்.
கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஜூனியா் ரெட் கிராஸ் கவுன்சிலா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமில், கல்வி மாவட்ட துணை ஆய்வாளா் மகாராஜன், கண்காா்டியா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ரத்னா, ஜூனியா் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் மாதேவ் சாந்தையா, பொருளாளா் ராபின், இணைச் செயலா்கள் முருகன், ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பள்ளிக் கல்வி மாவட்ட கன்வீனா் அந்தோணி ஆரோக்கிய ராஜா வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் எடிசன் நன்றி கூறினாா்.