மேலப்பாளையத்தில் மின் கம்பம் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த ஹோட்டல் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையத்தைச் சோ்ந்த காஜா மகன் மவுலானா (23). புரோட்டா மாஸ்டா். இவரின் நண்பா் யாசிக் (20). இருவரும் மோட்டாா் சைக்கிளில் கடந்த 17ஆம் தேதி மேலப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மவுலானா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.