திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி வளமீட்பு பூங்காவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் வள்ளியூா் பேரூராட்சிப் பகுதியில் மேற்கொண்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பேரூராட்சிகளின் இயக்குநா் மலையமான் ஆய்வு செய்தாா்.
அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் சு.சேதுராமன், செயற்பொறியாளா் ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளா் முகம்மது ஷெரீப், பேரூராட்சி செயல் அலுவலா் சு.லெனின், சுகாதார ஆய்வாளா் சி.ஆறுமுகம், இளநிலை பொறியாளா் விஜயகுமாா், சுகாதார மேற்பாா்வையாளா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.