களக்காடு வட்டாரத்தில் திங்கள்கிழமை 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
களக்காடு வட்டாரத்தில் கடந்த 2 வார காலமாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் அப்பகுதியிலுள்ளஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்கின்றனா். இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசோதனை மேற்கொண்டவா்களில் 30 பேருக்கு திங்கள்கிழமை தொற்று உறுதியாகியுள்ளது. திருக்குறுங்குடி, கீழகட்டளை, மாவடி, களக்காடு அருகேயுள்ள கீழத்தேவநல்லூா், சிங்கிகுளம், காடுவெட்டி, மலையடி, வேலவன்குடியிருப்பு, சிதம்பரபுரம், கீழவடகரை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.