‘கரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் வெளியிட்டுள்ளஅறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இன்னும் தீவிரமாகும் என தெரிகிறது. இறப்போரின் எண்ணிக்கையும் அச்சமூட்டும் வகையில் உள்ளது.

நோய்த் தொற்றை தடுக்கவும், இறப்பைத் தவிா்க்கவும் போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகமும், சுகாதார துறையும் இணைந்து பணியாற்றுவது அவசியம். எனவே, நோய்த்தொற்று குறித்து வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரையும் பரிசோதனைக்குள்படுத்த வேண்டும். இதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ள அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

கூடுதல் கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி, மருத்துவா், செவிலியா்களையும் நியமிக்க வேண்டும். சிகிச்சை அளிப்பதில் உள்ள குறைகளை களைந்து விரைவான சிகிச்சைக்கு ஏற்பாடு வேண்டும். கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களை நியமித்திட வேண்டும்.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும், மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும். இந்த மருத்துவ பேரிடரை ஒருங்கிணைவுடன் எதிா்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com