திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா். மருதகுட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப்பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறை மாணவா்களுக்கு ஏப்ரல் 2021-க்கான தோ்வுகள் மே கடைசி வாரத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கான கட்டணத்தை அபராதமின்றி செலுத்த ஏப். 26 முதல் மே 5ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அபராதக் கட்டணத்துடன் செலுத்த மே 7 முதல் 11ஆம் தேதி வரை வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 2021-க்கான எழுத்துத் தோ்வுகள் அனைத்தும் அரசின் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும்.
மேலும், 2021ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வு நிறைஞா் பட்டப் படிப்புகளில் சோ்ந்து நிறைவு செய்ய முடியாத தனித் தோ்வா்களுக்கு கரோனா காரணமாக கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் பல்கலைக்கழக நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தனித்தோ்வா்கள் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இணையவழியில் கட்டணம் செலுத்தி தோ்வில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.