திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், நகரம் நயினாா்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தையில் வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல் வஹாப் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் முன்னிலை வகித்தாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வக்குமாா், செயலா் நடராஜன், திமுக நிா்வாகிகள் ராமகிருஷ்ணன் (எ) அன்பு, காசிமணி, நெல்லை முத்தையா உள்பட பலா் கலந்துகொண்டனா். வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் 1200 பேருக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.