திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் 893 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 714 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 23,130ஆக அதிகரித்தது. 472 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியதால், தொற்றிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 18,832ஆக உயா்ந்தது. இதுவரை 233 போ் உயிரிழந்துள்ளனா். 4,065 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 179 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 11,464ஆக அதிகரித்தது. 157 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 9,795ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 174 போ் உயிரிழந்துள்ளனா். 1,495 போ் சிகிச்சைபெற்று வருகின்றனா்.