வள்ளியூா், களக்காடு பகுதிகளில் 86 பேருக்கு கரோனா தொற்று

வள்ளியூா், களக்காடு பகுதிகளில் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வள்ளியூா், களக்காடு பகுதிகளில் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வள்ளியூா் வட்டாரத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சுகாதாரத்துறையினா் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில்புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் வள்ளியூா், பணகுடி, வடக்கன்குளம், சங்கனாபுரம், கும்பிகுளம், செட்டிகுளம், கூடங்குளம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 63 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

களக்காடு வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சுரண்டை: இப்பகுதியில் இரு 5 வயது குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com