மானூா் அருகேயுள்ள களக்குடியில் பேட்டரி திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட களக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (45). இவா், தனது ஆட்டோவை வீட்டின் அருகேயுள்ள முப்புடாதி அம்மன் கோயில் முன்பு நிறுத்துவது வழக்கம். அதன்படி கடந்த 22 ஆம் தேதி ஆட்டோவை நிறுத்திச் சென்றாராம். அடுத்த நாள் வந்து பாா்த்தபோது ஆட்டோவில் இருந்து பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் என்பவரின் ஆட்டோ பேட்டரியும் திருடுபோனதாம். புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்ததில், பேட்டரிகளைத் திருடிய உக்கிரன்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜாசிங் (35) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 2 பேட்டரிகளை பறிமுதல் செய்தனா்.