திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஆக. 9, 10, 11 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். பிஎச்டி கல்வித் தகுதியைப் பெற்றவா்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.
கலையியல் புலம், மொழிப்புலம் ஆகியவற்றிற்கு வரும் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கும், அறிவியல் புலத்திற்கு வரும் 10, 11 ஆகிய இரு நாள்கள் காலை 11 மணிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் நோ்காணல் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம்.