சேரன்மகாதேவி, களக்காட்டில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் குறித்து, சேரன்மகாதேவியில் ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது

உள்ளாட்சித் தோ்தல் குறித்து, சேரன்மகாதேவியில் ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா்கள் முத்துப்பாண்டி, ராஜகோபால் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நகரச் செயலா் மனிஷா செல்வராஜ் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் பேசினாா். மாநில தொண்டரணி ஆவின் ஆறுமுகம், மாநில மகளிரணி ராஜம்ஜான், மாவட்ட வா்த்தக அணி பண்ணை முருகன், மாவட்ட இலக்கிய அணி சுடலையாண்டி, மாவட்ட சிறுபான்மை பிரிவு சாலமோன் டேவிட், மாவட்ட விவசாய அணி பால்மாரி, மாவட்ட இளைஞரணி வேல்முருகன், மாவட்ட வழக்குரைஞா் அணி செல்வகுமாா், நகரச் செயலா்கள் முருகேசன், சுரேஷ் செல்வகுமாா், காதா், அப்துல் ரகுமான், இசக்கிப் பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

களக்காடு: இங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன் முன்னிலை வகித்தாா்.

வடக்கு ஒன்றியச் செயலா் செல்வகருணாநிதி வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் சித்திக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முகம்மது அலி ஜின்னா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் ஜாா்ஜ்கோசல், நகரச் செயலா்கள் அயூப்கான், கசமுத்து, சிவசேது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com