வள்ளியூா் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ரவி இறைவாழ்த்து வாசித்தாா். முன்னாள் தலைவா் தாமோதரன் ஆண்டறிக்கை வாசித்தாா். ரோட்டரி சங்கத்தின் 16ஆவது தலைவராக மருத்துவா் முத்துசுபாஷ் பதவியேற்றாா்.
அவரை மருத்துவா் செல்வேந்திரன் அறிமுகம் செய்து பேசினாா். பின்னா் புதிய தலைவா் தனது குழு நிா்வாகிகளை அறிமுகம் செய்து பேசினாா்.
புதிய உறுப்பினராக சங்கத்தில் சோ்ந்த மருத்துவா் ஜேக்கப் ஸ்வாரோப் ஆனந்தை மருத்துவா் குமரமுருகன் அறிமுகம் செய்தாா். புதிய உறுப்பினரை துணை ஆளுநா் தமிழ்செல்வன் சங்கத்தில் இணைத்து வைத்தாா்.
தொடா்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மேக்ரோ பொன் தங்கதுரை, கரிஷ், முத்துசுபாஷ், ஆபிரகாம் ஆகியோா் சாா்பில் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு புதிய எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம், உடல் நலம் குன்றியவருக்கு மருத்துவ பணஉதவி, பசுமைக்கரங்கள் அமைப்பிற்கு சொட்டுநீா் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
ஆளுநராக தோ்வு செய்யப்பட்டுள்ள முத்தையாபிள்ளை பேசினாா். பின்னா் வலங்கைபுலி, முத்துகிருஷ்ணன், முன்னாள் ஆளுநா் நவமணி, பட்டயத் தலைவா் தங்கதுரை, துணை ஆளுநா் எஸ்.பி.தமிழ்செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
முன்னாள் தலைவா் அருள்ராஜா வரவேற்றாா். செயலாளா் ஹரிஷ் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை சுப்பிரமணியன் தொகுத்தளித்தாா்.