தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் இயக்க நாள் விழா திருநெல்வேலியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் தலைமை வகித்தாா். திருநெல்வேலி கல்வி மாவட்டத் தலைவா் அண்ணாதுரை வரவேற்றாா். மாநிலச் செயலா் சோ.முருகேசன் கொடியேற்றினாா்.
சங்கத்தின் செயல்பாடுகளால் கிடைத்த நன்மைகள் விளக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. ஒற்றுமை உறுதிமொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதேபோல அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள் ஸ்டெல்லா மொ்சிராணி, சுனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.