திருநெல்வேலி அருகே சிறுமியிடம் தொலைபேசியில் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு தொல்லை கொடுத்து வந்தாராம். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் ரசிதா வழக்குப் பதிந்து, ரமேஷை போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.