திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,958ஆக அதிகரித்துள்ளது. இதில் 36 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 47,224ஆக உயா்ந்துள்ளது. தற்போது 306 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 26,876ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,250ஆக உயா்ந்துள்ளது. தற்போது 145 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.