பாளையங்கோட்டை அருகே காா் மோதியதில் பலத்த காயமடைந்த, கன்னியாகுமரி மாவட்ட கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாகா்கோவிலைச் சோ்ந்த அந்தோணி மகன் புஷ்பராஜ்(68). இவா், கிருஷ்ணாபுரம் பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவந்திப்பட்டி அருகே கட்டட வேலை செய்துகொண்டிருந்த இவா், உணவு இடைவேளையின்போது, அப்பகுதியில் உள்ள சோனியா நகா் விலக்கு அருகே திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.