சேரன்மகாதேவியில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளை சாா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில், சூழல் மேம்பாட்டு கோட்டம், அரும்புகள் அறக்கட்டளை, கிராம உதயம், உதவும் உள்ளங்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவ கிருஷ்ணமூா்த்தி கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் சூழல் வனவா் மோகன்தாஸ், களக்காடு சூழல் வனவா் அப்துல் ரகுமான், அரும்புகள் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் லதா மதிவாணன், கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் புகழேந்தி பகத்சிங், அம்பாசமுத்திரம், பாபநாசம், களக்காடு, திருக்குறுங்குடி சரக வனக் குழுத் தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.