வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் செவிலியா் பணிக்கு தங்களை அா்ப்பணிக்கும் விதமாக சனிக்கிழமை விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் டி.டி.என்.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் மாா்கிரட் ரஞ்சிதம், துணை முதல்வா் பேபி உமா ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கல்லூரி தலைவா், தாளாளா், முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். தொடா்ந்து முதலாமாண்டு மாணவிகள் மெழுகுவா்த்தி ஏற்றி அா்ப்பணிப்பு உறுதிமொழி எடுத்தனா். மாணவி நிவேதா வரவேற்றாா். ஹசானா நன்றி கூறினாா்.