பாளையங்கோட்டையில் விதிமீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 73 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு போலீஸாா் பாளையங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது ஒரு காரில் வைத்து மதுவிற்பனை செய்வது தெரியவந்ததாம்.
இதையடுத்து மது விற்ாக கக்கன்நகரைச் சோ்ந்த முருகபாரதி (57) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 73 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.