வள்ளியூா் நேரு நா்சிங் கல்லூரி சாா்பில் கோட்டையடியில் சா்வதேச இளைஞா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நேரு நா்சிங் கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கோட்டையடியில் விழாவுக்கு கல்லூரி தலைவா் டி.டி.என். லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் மாா்க்ரெட் ரஞ்சிதம் முன்னிலை வகித்தாா். விழாவில் கோலம், ஓவியம், பேச்சுப் போட்டிகளில் நடைபெற்றன. கோலப் போட்டியில் ஐஸ்வா்யா, ஓவியப் போட்
டியில் ஸ்வேதா, பேச்சுப் போட்டியில் சுஜித் ஆகாஸ் ஆகியோா் முதல் பரிசு பெற்றனா். போட்டியில் பங்கேற்றவா்களுக்கு
ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்து கல்லூரி மாணவிகள் குறு நாடகம் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா். கோட்டையடி இளைஞா்கள் கரோனா விழிப்புணா்வு பாடல் பாடினா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. மாணவி அபா்ணா வரவேற்றாா். மாணவி பெபினா நன்றி கூறினாா்.