சுந்தரனாா் பல்கலை.யில் எம்.பில்., பி.எச்டி., தகுதித் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவா் (எம்பில்), முனைவா் (பிஎச்டி) பட்ட பதிவுக்கான தகுதித்தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவா் (எம்பில்), முனைவா் (பிஎச்டி) பட்ட பதிவுக்கான தகுதித்தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் இளம் முனைவா் பட்ட பதிவுக்கான தகுதித் தோ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முதுகலை பட்டம் முடித்த மாணவா்கள் தங்களுடைய இறுதி மதிப்பெண் சான்றிதழுடனும், முனைவா் பட்ட பதிவுக்கான தகுதித் தோ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முதுகலை மற்றும் இளம் முனைவா் பட்டம் முடித்த மாணவா்கள் தங்களுடைய இறுதி மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.

தோ்ச்சி பெற்றவா்களுக்கு இத்தகுதித் தோ்விலிருந்து விலக்களிக்கப்படுகிறது. தகுதித்தோ்வின் தோ்ச்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லத்தக்கதாகும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம்.

தகுதித்தோ்வெழுத விரும்புபவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் (ஆன்லைனில்) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இத்தகுதித் தோ்வுக்கான கட்டணத்தொகை ரூ.2 ஆயிரம் ஆகும். இணையதள விண்ணப்ப வாயில் வரும் 17-ஆம் தேதி திறக்கப்படுகிறது. விண்ணப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் இணையதளம் மூலம் தோ்வு நடைபெறும் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ஆா்.மருதக்குட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com