கூட்டுறவு ஊழியா்கள் போராட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி: தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பயிா்க் கடன், நகைக் கடன், மகளிா் சுயஉதவிக்குழு கடன்கள் தொடா்பான புள்ளி விவரங்களை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காளிதாசன், பொருளாளா் சண்முகச்சாமி, துணைத் தலைவா்கள் ஆறுமுகம், மாரியப்பன், முத்தையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com