கடையம் அருகே இளைஞரைத் தாக்கியவா் கைது

கடையம் அருகே முன் விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே முன் விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே உள்ள கீழப்பரும்பு, குறிஞ்சி நகா் முருகன் மகன் மணிகண்டன் (23). மேலப்பரும்பு ரவீந்திரன் மகன் பினு (39). பினுவிடம் மணிகண்டனின் உறவினா் சுப்பிரமணியன் சில நாள்களுக்கு முன் ரூ. 2 ஆயிரம் கடன் கேட்டாராம்.

அதற்கு பினு மறுத்து விட்டாராம். இது குறித்து மணிகண்டன் பினுவிடம் முறையிட்டுள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனியாக வந்த மணிகண்டனை பினு கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா் கடையம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சரசையன் வழக்குப் பதிந்து, பினுவை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com