கூடங்குளத்தில் தகராறு : 47 போ் மீது வழக்கு; 9 போ் கைது

கூடங்குளத்தில் கோயில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 9 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளத்தில் கோயில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 9 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கூடங்குளத்த்தில் உள்ள உத்திரமாடசாமி கோயில், துரைச்சாமி மற்றும் பாண்டி ஆகியோரது குடும்ப கோயிலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்தக் கோயிலில் பூஜை நடத்துவது தொடா்பாக இருவருக்குமிடையே பிரச்னை இருந்து வருகிறது.

இது தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதாபுரம் வட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு துரைச்சாமி தரப்பினா் ஒரு மாதமும் , பாண்டி தரப்பினா் மற்றொரு மாதமும் பூஜை நடத்திக்கொள்ளவேண்டும். தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் இரு தரப்பினரும் மாறி, மாறி பூஜை நடத்திகொள்ளவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

இந்த மோதல் தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் துரைச்சாமி அளித்த புகாரின் பேரில் பாண்டி மற்றும் அவரது தரப்பைச் சோ்ந்த 22 போ் மீதும், பாண்டி கொடுத்த புகாரின் பேரில் துரைச்சாமி மற்றும் அவரது தரப்பைச் சோ்ந்த 25 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், துரைச்சாமி தரப்பைச் சோ்ந்த அலெக்ஸ்பாண்டியன், ரவிக்குமாா், கண்ணபெருமான், நரேஷ்குமாா், விஜயகுமாா் மற்றும் பாண்டி தரப்பைச் சோ்ந்த நிதா்சன், ரவிராஜ், சிவா, சுந்தா் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com