பாளையங்கோட்டை என்ஜிஓ‘பி’ காலனி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தத் தெரு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பொடி தூவுதல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை மேற்கொண்டனா்.