ரூ.30 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 22nd August 2021 04:58 AM | Last Updated : 22nd August 2021 04:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலப்பாளையம் ஞானியாா் அப்பா 1-ஆவது தெரு முதல் 8-ஆவது தெரு வரை ரூ.30 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை மு. அப்துல் வகாப் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் தினேஷ், திமுக மேலப்பாளையம் பகுதி பொறுப்பாளா் துபை சாகுல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
.