திருநெல்வேலி நயினாா்குளம் சாலையில் உள்ள மதுக் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் சாலையில் இயங்கி வரும் மதுக் கடையை ஊழியா்கள் வழக்கம்போல கடந்த 25ஆம் தேதி (புதன்கிழமை) இரவில் பூட்டிச் சென்றனராம். வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது, கடையின் முன்பக்கக்
கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. எனினும் கடையினுள் சென்று பாா்த்தபோது, பணம் மற்றும் மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது. புகாரின்பேரில், குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.