திசையன்விளை வி.எஸ்.ஆா். பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தாளாளா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் தலைமை வகித்தாா். இதையொட்டி, மாணவா்களுக்கு குறு நாடகம், பாடல், எய்ட்ஸ் நோய் பற்றிய ஓவியம் , விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு , இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி இயக்குநா் சௌம்யா ஜெகதீஸ் பரிசுகளை வழங்கினாா். எய்டஸ் குறித்து துணை முதல்வா் எலிசபெத் பேசினாா். இதில், பள்ளிமாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.