நெல்லை தனியாா் மருத்துவமனையில் இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 04th December 2021 11:56 PM | Last Updated : 04th December 2021 11:56 PM | அ+அ அ- |

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த துரைப்பாண்டியன் மகன் பாபுராஜ்(33). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால், அவரை திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...